Friday, November 18, 2011

புதுப் புரட்சி

நான் தமிழன்,
நீ தெலுங்கன்...

நான் இந்தியன்,
நீ பாகிஸ்தானி...

நான் பிராமணன்,
நீ சூத்திரன்...

நான் வலதுசாரி,
நீ இடது சாரி...

நான் ஆத்திகன்,
நீ நாத்திகன்...

நான் சீக்கியன்,
நீ கிருத்துவன்...

கடக்கும் திசை எங்கும்,
கண்ணுக்கு புலப்படாமல் சுவர்கள்..

நாம் கஷ்டப் படுபவர்கள்...
நாம் சுரண்டப் படுபவர்கள்...
என்ற ஒற்றுமை மட்டும் உறக்கத்தில்...

கண்கள் உறக்கத்தை கலைத்ததும்,
காற்றில் கரைந்து விடுகிறது சுவர்கள்...

யுகப் புரட்சி பார்த்தாயிற்று,
இந்த புதுப் புரட்சி?

Thursday, November 10, 2011

மழை

பறந்து சென்றவர்
திரும்பி வந்தனர்

எங்கு எடுக்கப் பட்டதோ
அங்கே திருப்பி வைக்கப் பட்டது..

நீரின் மீள் சுழற்சி,
கசடுகள் நீங்கி
சுத்தமாய் திரும்பி வந்தால்...

சாலையில்
கால்வாயில் தான்
சங்கமம்...


 தோழர் ஜெயராம் தினகரபாண்டியன் அவர்களின் வலைப்பூவில் மழை குறித்து கேட்ட கேள்விகளுக்கு என் பதில்...

Friday, November 4, 2011

2G ஊழல்

காத்தாடி
வால்
நூல் 

யார் காத்தாடி
யார் வால்
யார் நூல்
நீங்களே புரிந்து கொள்ளுங்கள்...

Thursday, November 3, 2011

மனசு

அடி மேல் அடி வைத்து
தடியை நிலத்தில் ஊன்றி,
ஒரு அடிக்கு 
ஒரு நிமிஷம் 
என்று நடந்து சென்றார்
ஒரு பெரியவர்...

மின்சார கட்டணம்
கட்ட கடைசி தேதி...

வேகமாய் நடந்து
அவரை கடந்தேன்...

கடந்த ஒரு நொடியில்
வேதனை பட்டிருப்பாரோ 
என்ற எண்ணம் 
மட்டும்... 

இன்னும் 
வரிசையில் நின்று 
கொண்டிருக்கிறது
என் மனசில்...